புதன், 15 செப்டம்பர், 2010

ஞாயிறு

ஞாயிறு

நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம்,

நீ காட்சி, மின்னல், இரத்தினம் ,

கனல்,தீக்கொழுந்து,

இவையெல்லாம் நினது நிகழ்ச்சி.

கண் நினது வீடு,

புகழ், வீரம்-இவை நினது லீலை.

மழையும் நின் மகள்,

மண்ணும் நின் மகள்,

காற்றும் கடலும்

கனலும் நின் மக்கள்.

வெளி நின் காதலி

இடியும் மின்னலும்

நினது வேடிக்கை.

-மகாகவி சுப்ரமணிய பாரதி