சனி, 9 ஜனவரி, 2010

பெறுனர்
பேராசிரியர் செல்வ கனகநாயகம்
இயக்குனர்
தெற்காசியவியல் ஆய்வு மையம்
டொராண்டோ பல்கலைக்கழகம்
கனடா
மதிப்பிற்குரிய அய்யா ,
வணக்கம். கனடாவில் செயல்படும் தமிழ் இலக்கிய தோட்டமும் டொராண்டோ பல்கலைக்கழக தெற்காசியவியல் ஆய்வு மையமும் இணைந்து ௨௦௦௯ ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் இலக்கிய விருதான இயல் விருதை வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத தெரிவித்து கொள்கிறேன் .
உடல்நலக்குறைவு காரணமாக கனடாவிற்கு நேரில் வந்து இயல் விருதை பெற்றுக்கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். தங்கள் மடலில் குறிப்பிட்டது போல சென்னையில் தங்களிடம் பெற்றுக்கொள்வேன். தங்கள் மடலில் கேட்டுக்கொண்டபடி தமிழ் இலக்கிய ஆய்விற்கு எனது பங்களிப்பைத் தொகுத்து விழாவின்போது வழங்க விரும்புகிறேன். தாங்கள் விரும்பினால் ஏன் ஆய்வுத் தொகுப்பின் ஒரு படியைத் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

மதிப்பிற்குரிய திரு ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கும் இயல் விருது வழங்குவது பற்றி ஏன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் ஆய்வு நிறுவனத்திற்கு எனது சில ஆய்வு நூல்களை கூடிய விரைவில் வான் அஞ்சலில் அனுப்புவேன்.
விருதை முடிவு செய்த நடுவர் குழுவினருக்கும் விருது வழங்கும் அமைப்பிற்கும் என் குடும்பத்தின் சார்பிலும் நண்பர்கள் சார்பிலும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள்
ஞானி ( கி. பழனிச்சாமி )
24,வி. ஆர். வி. நகர்,
ஞானாம்பிகை ஆலை அஞ்சல்
கோயம்புத்தூர் -641029
தமிழ் நாடு
தொலைபேசி :