ஞாயிறு, 16 மே, 2010

இரவு

இரவு
நாம் உறங்காத இரவே
உலகை உணர்த்தும் பகல்
உண்மை உலகின் வெளி
பகலின் வெளிச்சம் இருள்
பொய்யான ஆரவாரங்கள் ஆர்பாட்டங்கள்
போலியான் நாடகங்கள் முகமூடிகள்
உள்ளத்தின் உண்மைகள் கனவுகளாய்

அத்து மீறிய எண்ணங்கள் நினைவுகளாய்
எவ்வளவைச் செரிக்கும் இந்த இரவு ...
சூரியனை அறிமுகபடுத்திய இந்த இரவு

சூரியனால் அறிய முடியுமா?

உலகமே உறங்கும் பொது

விழித்திருக்கும் இரவு

1 கருத்து:

  1. மிகவும் நன்று. சமூகத்தின் எண்ணற்ற போலிமைகளையும் இரவின் தன்மையையும் ஒருசேரக் காட்டும் கவிதை அற்புதம்.
    ஜவகர்.

    பதிலளிநீக்கு